கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோருக்கு சிறந்த சேவைகளை நல்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – சுங்க அதிகாரிகளிடம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச வலியுறுத்து!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/07/image_e041f9c409.jpg)
சேவையாளர்கள் திருப்தியுடன் பணியாற்றுவதற்கு தேவையான வசதிகளை அரசாங்கம் வழங்கியுள்ளதாக கூறியுள்ள நிதி அச்சர் பசில் ராஜபக்ச, கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோருக்கு சிறந்த சேவைகளை நல்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இலங்கை சுங்க அதிகாரிகளுக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது, சுங்க அதிகாரிகள் தொழில் ரீதியாக முகங்கொடுக்கும் நடைமுறை சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை சுங்கத்துடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பல நிறுவனங்கள் சேவைகளை பெற்றுக்கொள்ள செல்லும்போது முகங்கொடுக்கும் இன்னல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர வருமானம் வழிமுறைகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கருத்து பரிமாறப்பட்டதாக நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|