குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறிய 13 வெளிநாட்டவர்கள் கைது!

Monday, April 29th, 2019

பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் , 13 வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவகமுவ கொத்தலாவல பகுதியில் வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த ஈராக் நாட்டு பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கல்கிஸ்ஸ பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய 6 நைஜீரியா பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிகட புத்கமுவ வீதியிலும் 4 நைஜீரியாவை பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இரத்மலானையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில், 20 வயதாக இந்திய பிரஜையொவருவர் கைது செய்யப்பட்டுளளார்.

தெஹிவளையில் தாய்லாந்தை சேர்ந்த 38 வயதான பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts:


பொலித்தீன் கழிவுப்பொருட்களை கடலில் கொட்டும் நாடுகளின் பட்டியலில் இலங்கை ஐந்தாமிடத்தில்!
மத்திய வங்கியிடமிருந்து இன்றையதினம் டொலர் ஒதுக்கம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாக பால்மா இறக்கும...
பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகப்படுத்துவதே வேலை நிறுத்தங்களின் நோக்கம் – உணர்ந்து செயற்படுமாறு அன...