கொரோனா வைரஸின் கொப்புகள் அனைத்தும் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது – இராணுவ தளபதி தெரிவிப்பு!
Tuesday, May 19th, 2020சமூகத்திற்குள் பரவிய கொரோனா வைரஸின் கொப்புகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சர்வேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
வெலிசர கடற்படை முகாமில் காணப்பட்ட கொரோனா கொப்புகளை இதுவரையில் 75 வீதம் கட்டுபடுத்தியுள்ளதாகவும் எதிர்வரும் நாட்களில் முழுமையாக கட்டுப்படுத்தி விடலாம் என தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் கடற்படைக்குள் பரவியமுறை தொடர்பில் விசேட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்காக வைத்திய குழுக்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சமகாலத்தில் வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்கள் அழைத்து வரப்படுவதனால் எதிர்வரும் காலங்களில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் நோயாளிகள் கட்டாயம் இனங்காணப்படுவார்கள் என தெரிவித்துள் இராணுவ தளபதி தனிமைப்படுத்தல் நடவடிக்கை மூலமாக கொரோனா வைரஸ் பரவ இடமளிக்காமல் தடுக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|