கப்பலுடன் மீன்பிடி படகு மோதி விபத்து – 7 மீனவர்கள் மீட்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/11/92403413_38463cd8-9e63-4797-befc-cde965bd43ae.jpg)
காலி மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடல் தொழிலுக்காக சென்ற படகு, வர்த்தக கப்பல் ஒன்றுடன் மோதி நேற்றையதினம் விபத்துக்குள்ளானதாகவும் படகில் பயணித்த 7 மீனவர்களையும் கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர் எனவும்கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
.காலி மீன்பிடித்துறைமுகத்திலிருந்து சுமார் 9 கடல் மைல் தொலைவிலேயே மீனவப் படகு விபத்துக்குள்ளானதாகவும், அவர்களை கடற்படைக்கு சொந்தமான விரைவுப் படகின் உதவியுடன் காப்பாற்றியுள்ளதாகவும் கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, விபத்துக்குள்ளான படகு மற்றும் விபத்தை எதிர்நோக்கிய மீனவர்களை கடற்படையினர் காலி துறைமுகத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வந்தனர்.
Related posts:
இடம்மாறுகின்றது ஆட்பதிவுத் திணைக்களம்!
யாழ்.போதனா வைத்தியசாலையில் தாதியர் ஒருவருக்கும் கொரோனா தொற்றுறுதி!
நாளை முதல் பாடசாலைகள் மீள ஆரம்பம் - முதலாம் தவணை நீடிப்பு - பாடசாலை சேவையில் ஈடுபடும் பேருந்து மற்று...
|
|