கொச்சி விமான நிலையத்தில் பதற்றம்: காரணம் வெளியானது!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/05/images-28.jpg)
கேரள மாநிலம் கொச்சியிலிருந்து இலங்கை கொழும்புக்கு 227 பயணிகளுடன் இன்று மாலை ஸ்ரீலங்கன் ஏர்லைன் விமானம் கிளம்பியது. ஓடுதளத்தில் இருந்து விமானம் மேலே எழும்பும் போது விமானத்தின் சக்கரம் ஓடுதளத்தின் எல்லையில் இருக்கும் விளக்கில் பயங்கரமாக மோதியது.
இதனை அடுத்து, விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டது. பயணிகள் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். சிறிது நேரத்திற்கு ஓடுதளம் மூடப்பட்டு, பின்னர் நிலைமை சீரானதும் திறக்கப்பட்டது. இந்த விபத்தில் விமானத்தின் சக்கரம் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Related posts:
இலங்கையில் இன்று கடும் காற்றுடன் கூடிய காலநிலை!
மாலபே தனியார் வைத்திய கல்லூரியை எந்த சந்தர்ப்பத்திலும் மூட தயாராக இல்லை - அமைச்சர் ராஜித !
மின்சார சபை ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!
|
|