கடலில் மூழ்கிய பல்கலைக்கழக மாணவியும் மரணம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/08/death.png)
யாழ்ப்பாண பண்ணை கடல் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் காயமடைந்த பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார்.
கடந்த 24 ஆம்திகதி யாழ்ப்பாணம் பண்ணை குருசடித்தீவுக்கு சென்ற படகு விபத்திற்குள்ளானது. இதில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் ஒன்றரை வயது குழந்தை உட்பட 5 பெண்கள் கடலில் மூழ்கியுள்ளனர்.
குறித்த ஐவரும் அருகிலிருந்த மீனவர்களால் காப்பாற்றப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம் வருட மாணவி செல்வி டயானா சகாயதாஸ் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த அனர்த்தத்தின் போது நாவாந்துறையைச் சேர்ந்த 28 வயதுடைய குயின்சன் தேவதாஸ் என்பவர் ஸ்தலத்திலேயே பலியானமை குறிப்பிட்டத்தக்கது.
Related posts:
மருத்துவக் கல்விக்கான தகுதி தொடர்பில் வர்த்தமானி - அமைச்சர் ராஜித்த சேனாரத்ன!
புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் இரண்டாவது நேர்முகப்பரீட்சை இன்று!
இந்தியாவுடன் புதிய ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி!
|
|