கடந்த வாரம் போன்றே இவ்வாரமும் செயற்படுத்துங்கள் – பாடசாலைகள் தொடர்பில் கல்வியமைச்சு அறிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/08/download-1-19.jpg)
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் கடந்த வாரத்தில் செயற்பட்டமையை போன்றே இன்றிலிருந்தும் செயற்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி 2020 ஜூலை 28 ஆம் திகதி கல்வி அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்துக்கு அமையவே பாடசாலைகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த சுற்றுநிருபத்தை மீறி செயற்பட வேண்டாம் என்று கல்வி அமைச்சு பாடசாலை நிர்வாகங்களைக் கோரியுள்ளது.
இதேவேளை, கொரோனா தடுப்பு சுகாதார ஒழுங்குமுறைகளை உரியமுறையில் கடைப்பிடிக்குமாறும் கல்வி அமைச்சு அனைத்து பாடசாலை நிர்வாகங்களிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீண்டும் 800 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை!
தேர்தல் காலங்களில் சமத்துவம் பேசிப் பயனில்லை – ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐ...
வடக்கு மாகாணத்தில் பாடசாலை இடைவிலகல் சடுதியாக அதிகரிப்பு - மாகாண கல்வித் திணைக்கள புள்ளிவிபரங்கள் சு...
|
|