வடமராட்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் இன்று போராட்டம்!

Thursday, March 15th, 2018

வடமராட்சி கிழக்கு மக்களால் முன்னெடுக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறியும் போராட்டம் ஓராண்டைக் கடந்துள்ள நிலையில்,  இன்று (15)  மாபெரும் கண்டனப்பேரணியும்,கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தின் முன்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறியும் அமைப்பால் போராட்டம்ஆரம்பமானது.

இந்த போராட்டம் ஆரம்பித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடையுள்ள நிலையில், இந்த கண்டனப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: