ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கு தொழில்வாய்ப்பு!

Saturday, October 8th, 2016

இராணுவ நலன் வேலைத்திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்றுள்ள 50 இராணுவ வீரர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய கட்டுமானம், விவசாயம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இவர்களுக்கு பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. குறித்த தொழில்களுக்காக இதுவரை 6000இற்கும் அதிகமான ஓய்வுப்பெற்ற இராணுவ வீரர்கள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

adadad1-242x300

Related posts: