ஓகஸ்ட் முதலாம் திகதிமுதல் இ.போ.ச பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/07/ctb-415x260.jpg)
இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளுக்கான கட்டணங்களை ஓகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி பேருந்து கட்டணங்கள் நூற்றுக்கு 6 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும், குறைந்த கட்டணமாக 9 ரூபாய் அறவிடப்படும் எனவும் தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு ஏற்படும் செலவுகள் அதிகரித்துள்ளமையாலே கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக,கண்டி – குண்டசாலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே கூறியுள்ளார்.
Related posts:
மின்சார கட்டணம் இன்று முதல் 300 ரூபாவாக குறைப்பு!
எந்தவொரு மாணவருக்கும் சலுகை மறுக்கப்பட மாட்டாது - மஹாபொல திட்டம் குறித்துபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக...
பதவியை இராஜினாமா செய்வதாக பரவி வரும் செய்தி பொய்யானது - பிரதமர் அலுவலகம் அறிவிப்பு!
|
|