எந்தவொரு மாணவருக்கும் சலுகை மறுக்கப்பட மாட்டாது – மஹாபொல திட்டம் குறித்துபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!

Monday, March 5th, 2018

மஹபொல அல்லது ஏனைய புலமைப்பரிசில் நிதியுதவியானது அதற்கு உரித்தான எந்தவொரு மாணவருக்கும் மறுக்கப்பட மாட்டாது என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்தலைவர் பேராசிரியர் மொஹான் டீ சில்வா குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்த பீடங்களில் உள்ள மாணவர்களுக்கான புலமைப்பரிசில் கொடுப்பனவு இந்த மாதத்தில் வழங்கப்படும் எனவும் ஏனையபீடங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாத காலப்பகுதிக்குள் இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் புலமைப்பரிசில் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: