உறவினர் வீடுகளுக்கு செல்வதை மட்டுப்படுத்துங்கள் – சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் வலியுறுத்து!

Thursday, April 15th, 2021

புத்தாண்டு காலப்பகுதிமை முன்னிட்டு உறவினர்களின் வீடுகளுக்கு செல்லும் போது சுகாதார வழிமுறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு சுகாதார அமைச்சு பொது மக்களிடம் மீண்டும் கோரியுள்ளது.

அத்துடன் கொவிட்-19 தொற்று சமூகத்தில் இருந்து இன்னும் முற்று முழுதாக நீங்கவில்லை என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் உத்பலா அமரசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தமுறை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பொதுமக்கள், புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இவ்வாறான பின்னணியில் வயோதிபர்கள் மற்றும் குழந்தைகள் வசிக்கும் வீடுகளில் உள்ளவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம் கொவிட்-19 தடுப்பூசிகள் பெற்றுக்கொண்டிருந்தாலும் உறவினர்களின் வீடுகளுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சட்டிக்காட்டியுள்ளதுடன்  முடிந்தவரை உறவினர்களின் வீடுகளுக்கு செல்வதை மட்டுப்படுத்துமாறும் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின சமூக மருத்துவ நிபுணர் உத்பலா அமரசிங்க கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: