உயர்தர வகுப்பு மாணவர்கள் கொரிய மொழியையும் தேர்வு செய்யலாம் – கொரிய தூதுவர் தெரிவிப்பு!

இந்த ஆண்டுமுதல் கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழியாக கொரிய மொழியை தேர்வு செய்ய முடியும் என கொரிய தூதுவர் சந்துஷ் சுன்ஜின் ஜியோன்கி தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டுமுதல் உயர்தரத்தில் கொரிய மொழி பரீட்சையில் சித்தியடைவோர் உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் உள்நுழைவதற்கான வாய்ப்பு கிடைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை கொரிய மொழியைக் கற்பதன்மூலம், கொரிய நாட்டில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரிய மொழியை உயர்தர வகுப்புக்களில் உத்தியோகபூர்வமாக இணைத்துக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளாளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்குக் கிழக்கு மாகாணங்களில் முதல் தடவையாக யாழ். போதனா வைத்தியசாலையில் 'DEXA SCAN' பரிசோதனைச் சிகிச...
இரவுவேளைகளிலும் திறக்கப்படும் தெகிவளை மிருகக்காட்சிசாலை!
மழை காலங்களில் எலிக் காய்ச்சல் பரவும் ஆபத்து - சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் நிபுணர் எச்சரிக்கை!
|
|