ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் திருஞானலிங்கத்தின் முயற்சியால் அரியாலையில் உப வீதிகள் செப்பனிடப்பட்டன!

அரியாலை மேற்கு இளையதம்பி குறுக்கு வீதி மற்றும் A9 கண்டி வீதி உப – ஒழுங்கை ஆகியன ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பிரனது முயற்சியால் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக செப்பனிடப்படாத நிலையில் காணப்பட்ட குறித்த வீதிகளால் அப்பகுதி மக்கள் நாளாந்தம் பல அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்த நிலையில் அதை செப்பினிட்டு தருமாறு அப்பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் ரவீந்திரதாசனின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.
இதனடிப்படையில் நல்லூர் பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கட்சியின் உறுப்பினர் திருஞானலிங்கம் அவர்களின் சிபார்சுக்கு அமைவாக குறித்த வீதிகள் செப்பனிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பேருந்து கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை!
பலமான கடவுச்சீட்டு :முன்னிலையில் ஜேர்மன் - இலங்கைக்கு பின்னடைவு!
முதலாளிக்கு சமுர்த்தி முத்திரை அவருக்கு கீழ் பணியாற்றுபவருக்கு இல்லை: பாகுபாடு நீக்கப்பட வேண்டும் - ...
|
|