இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய இருவர் விடுதலை
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/06/att-720x450.jpg)
பாகிஸ்தானில் வைத்து கடந்த கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இருவரை பாகிஸ்தான் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
இப்ராகிம் கலில் மற்றும் ஒபிய்துல்லா ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியாது போனமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாகூர் நகரில் வைத்து இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில்இ ஏழுவர் உயிரிழந்ததோடு ஏழு இலங்கை வீரர்கள் உட்பட 20 பேர் காயமடைந்தனர்.இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதல் எதிரொலியாக தற்போது வரை சர்வதேச கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட அச்சம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தீர்மானம்மிக்க கலந்துரையாடல் இன்று - தொடருந்து தொழிற்சங்கம்!
உத்தியோகபூர்வ வசிப்பிடத்தை பெறுவதில்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முடிவு!
இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் இரண்டாயிரத்து 456 பேருக்குக் கொரோனா தொற்று - 19 பேர் மரணம...
|
|