இலங்கை – அவுஸ்திரேலியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/03/images-1-14.jpg)
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள குறித்த வேலைத் திட்டம் ஒரு வார காலத்திற்கு இடம்பெறும். இதன் கீழ் அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான நான்கு கப்பல்கள் இலங்கை வரவுள்ளன.
கம்பெரா மற்றம் நியூகாசெல் ஆகிய இரண்டு கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளதுடன், மேலும் இரண்டு கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு வரவுள்ளன.
அவுஸ்திரேலியாவின் சுமார் 10 ஆயிரம் முப்படை வீரர்கள் இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தில் பங்கு கொள்ளவுள்ளனர்.
அவர்கள் இலங்கையில் முப்படையினருடன், மனிதநேய சேவைகள், அனர்த்தமுகாமை சேவைகள், கடல்வள பாதுகாப்பு, அமைதி காக்கும் வேலைத் திட்டங்கள் பலவற்றில் ஈடுபடவுள்ளனர்.
Related posts:
பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள் 72 பேரின் இடமாற்றம் இடைநிறுத்தம்!
நாட்டின் பல இடங்களில் மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!
இனப்பிரச்சினைக்கு தீர்வு குறித்து மார்ச் மாதம் முக்கிய அறிவிப்பு வெளியாகும் - ஜனாதிபதி ரணில் விக்கிர...
|
|