இனப்பிரச்சினைக்கு தீர்வு குறித்து மார்ச் மாதம் முக்கிய அறிவிப்பு வெளியாகும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை!

Thursday, December 28th, 2023

நாடு எதிர்நோக்கும் இரு முக்கிய சவால்களில் ஒன்று நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் மற்றொன்று இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆகவே கட்சி வேறுபாடின்றி இந்த இலக்குகளை அடைவதற்கு அனைவரும் கைகோர்க்க வேண்டும் என ஜனாதிபதி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

பதுளை குருத்தலாவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் அதேவேளை நல்லிணக்கம் தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

இதற்கு தீர்வு காணும் பொருட்டு எதிர்வரும் மார்ச் மாதம் அது தொடர்பான விசேட அறிக்கையொன்றை வெளியிட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: