இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி நியமனம்!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் காரியாலயத்திற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியாக ஏ.எல்.ஏ.அஸீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பிலான கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் மைக்கல் மோலனுக்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அஸீஸ் கடந்த 26 ஆண்டுகளாக ராஜதந்திர சேவையில் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
சட்டத்தரணிகள் சங்கத்தில் புதிய மாற்றம்!
கொரோனா தொற்றின் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் அமைதியான முறையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய மக்கள்!
2021 ஆம் ஆண்டுக்கான பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் 150 நாட்களாக குறைப்பு - - கல்வி அமைச்சர் பேராசிரியர...
|
|