இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக நளின் பெரேரா நியமனம்!

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் நளின் பெரேரா ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே நளின் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
நளின் பெரேரா, இலங்கையின் 46 ஆவது பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதியாக நீதித்துறையில் இணைந்துகொண்டு படிப்படியாக பதவி உயர்வினை பெற்ற நளின் பெரேரா, பிரதம நீதியரசராக நியமிக்கப்படுகின்றபோது உயர் நீதிமன்ற நீதியரசராக கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
முகக்கவசமின்றி பொதுவெளியில் நடமாடினால் 6 மாத சிறைத்தண்டனை - சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹ...
தடுப்பூசி பெறாதவர்களைத் தேடி வீடு வீடாக பிரசாரம் முன்னெடுப்பு – இராஜாங்க அமைச்சர் மருத்துவர் சுதர்ஷன...
மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணம் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கவில்லை - அமைச்சர் ரம...
|
|