இலங்கையின் தலைமைத்துவம் தொடர்பில் அரசியலமைப்பிற்கு உட்பட்டு தீர்வு காணப்படும் என எதிர்ப்பார்ப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு!!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2022/07/1657898621-india-2.jpg)
இலங்கையின் தலைமைத்துவம் தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை தீர்ப்பதற்காக அரசியலமைப்பிற்கு உட்பட்டு தீர்வு காணப்படும் என எதிர்ப்பார்ப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பில், அந்த அமைச்சின் ஊடகப் பேச்சாளர் அரிந்தம் பாஷி இதனைக் குறிப்பிட்டார்.
இந்திய வெளிவிவகார அமைச்சின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கை பற்றி ஊடகவியலாளர்கள் வினவிய போது அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் –
“ஜனநாயக முறை மற்றும் விழுமியங்கள், அத்துடன் நிறுவப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் இலங்கை மக்கள் முன்னேற்றத்திற்காக அவர்களின் அபிலாஷைகளை அடைய முயற்சிக்கும் போது அவர்களுடன் நாங்கள் தொடர்ந்து நிற்போம்.”
இலங்கையின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
|
|