இலங்கையில் – எதிர்வரும் 30 ஆம் திகதி பிம்ஸ்ரெக்ஸ் தலைவர்கள் மாநாடு!
Tuesday, March 22nd, 2022பிம்ஸ்ரெக்ஸ் அமைப்பின் தலைவர்கள் மாநாடு எதிர்வரும் 30 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இம்முறை இந்த அமைப்பின் தலைமைத்துவம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தாய்லாந்து பிரதமர் வரவுள்ளார். அடுத்த தலைமைத்துவம் அவருக்கு வழங்கப்படவுள்ளது.
ஏனைய நாடுகளின் தலைவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். எதிர்வரும் 29 ஆம் திகதி 7 உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அதிவேக வீதிகளில் விதிமுறைகளை மீறிய 19,837 சாரதிகள் கைது !
பொலித்தீன் பாவனையைத் தவிருங்கள் - அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்து!
சில தென்னிலங்கை இனவாத தலைவர்களுக்கு விலைபோனவர்களே தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டி தூபமிட்டுக்...
|
|