இம்முறை 6012 மாணவர்களே சாதாரண தரப் பரீட்சையில் 9ஏ சித்தி பெற்றனர்.
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/03/Untitled-2-copy-7.jpg)
கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்று தற்போது வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 6012 மாணவர்களே 9ஏ சித்தி பெற்றுக்கொண்டுள்ளனர் என பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (20) ஊடகங்களுக்கு அவர் இதனைக் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்
இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய 274,324 பாடசாலை பரீட்சார்த்திகளில் 189,428 பரீட்சார்த்திகள் உயர்தரம் கற்க தகுதிப் பெற்றுக்கொண்டுள்ளனர். சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய 69.33 வீதமான மாணவ மாணவியர் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதுடன், 83,796 மாணவ மாணவியர் பரீட்சையில் சித்தியடையவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
வீடுகளைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
தபால் நிலையங்கள் அனைத்துக்கும் இணைய வசதி : அமைச்சர் பந்துல குணவர்தன!
பெற்றோலை வாய்மூலம் வெளியேற்றுவது நுரையீரலுக்கு ஆபத்து - கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் விசேட வைத்...
|
|