இந்திய அரசு நிதி உதவி – கிழக்கு மாகாணத்தில் சோலார் பேனல்களை நிறுவ நடவடிக்கை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2023/08/download-4-12.jpg)
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிற்கும் இடையிலான கலந்துரையாடல் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் நேற்று(14) இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான சாலை வரைபடத்தைத் திட்டமிடுதல், இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் அரசு அலுவலகங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் மதத் தலங்களுக்கு இலவச சோலார் பேனல்களை நிறுவுவதற்கு காஞ்சன விஜயசேகர இணக்கம் தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை மின்சார சபையின் தலைவர், பிரதம செயலாளர், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட அரச அதிபர்கள், திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நன்றி தெரிவித்தார் ஜனாதிபதி!
யாழில் முகமூடி கொள்ளையர்கள் துணிகர கொள்ளை - மூவர் வைத்தியசாலையில்!
பொருளாதார நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பங்களியுங்கள் - இலங்கை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்...
|
|