அரிசி விலையில் மாற்றம் – வர்த்தக அமைச்சர் அறிவிப்பு!

அரிசி விலைகளை இந்த வாரத்தில் இருந்து குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இது தெர்டர்பில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, ஒரு கிலோகிராம் சிவப்பு அரிசியை 88 ரூபா என்ற சில்லறை விலைக்கு நுகர்வோருக்கு சதொச ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.
ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசியை 92 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் நாட்டரிசியை 97 ரூபா என்ற விலைக்கும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்வேன் – ஜனாதிபதி!
யாழ்ப்பாணத்தை மீண்டும் அச்சுறுத்தும் வாள் வெட்டுக்குழு !
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் பொது இடங்கள் மற்றும் வீதிகளில் குப்பைகளை கொட்டினால் சட்ட நடவடிக்கை...
|
|