அரசியலமைப்புச் சபையில் இருந்து விலகுவது குறித்து தீர்மானிக்கவில்லை – தினேஷ் குணவர்தன!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/07/dinesh-gunawarththana-01-01-2015-720x480-720x480-720x480.gif)
அரசியலமைப்பு சபையில் இருந்து விலகுவது சம்பந்தமாக கூட்டு எதிர்க்கட்சி இதுவரை தீர்மானிக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்..
இது தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியினர் தற்போதும் பேச்சு நடத்திக் கொண்டிருப்பதாக அவர் கூறினார். எவ்வாறாயினும் கூட்டு எதிர்க்கட்சி புதிய அரசியலமைப்புக்கான சபை மற்றும் செயற்பாட்டுக் குழுவில் பணியாற்றிக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
இதேவேளை எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் அரசியலமைப்பு சபையில் இருந்து விலக முடியாது என்று பிரதியமைச்சர் அஜித். பி. பெரேரா கூறினார். அவ்வாறு விலகுவதாயின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
Related posts:
பல்கலை மாணவர்கள் சுட்டுக் கொலை: பொலிஸாருக்கு பிணை வழங்கினார் இளஞ்செழியன்!
கொள்கலன்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலரை விடுவித்தது மத்திய வங்கி – 400 கொள்கலன்கள் விடுவிக...
தேர்தலை ஒத்திவைக்கக் கோரும் மனு மீதான விசாரணை மே மாதத்துக்கு ஒத்திவைப்பு! ......
|
|