அமரர் சுந்தரம் டிவகலாலாவின் பூதவுடலுக்கு ஈ.பி.டி.பி அஞ்சலி மரியாதை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2023/01/IMG-20230112-WA0024.jpg)
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் கல்விச் செயலாளரும் ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளருமான சுந்தரம் திவகலாலா இன்று 12.01.2023 காலமானார்.
இந்நிலையில் வணார்பணையில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்பட்டுள்ள நினையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாகப் பொறுப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் மற்றும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அஞ்சலி மரியாதை செலுத்தியதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மிகவும் கடினமான காலங்களில் தனது ஆளுமைத் திறனால் அற்புதமான சேவையை வடக்குக் கிழக்கு கல்விப் பரப்பில் சிறப்பாக முன்னெடுத்த இவர் தீர்மானம் எடுப்பதிலும் அதை நடைமுறைப்படுத்துவதிலும் துணிச்சல் மிக்கவராக இவர் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|