போராட்டக்காரர்கள் மற்றும் வேலை நிறுத்தம் செய்பவர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை பிரயோகிக்கங்கள் மேற்கொள்ள கூடாது – ஜனாதிபதி கோட்டாபய அதிரடி உத்தரவு!

Tuesday, February 15th, 2022

போராட்டக்காரர்கள் மற்றும் வேலை நிறுத்தம் செய்பவர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை பிரயோகிக்கங்கள் ஆகியவற்றினை மேற்கொள்ள கூடாது என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கே அரச தலைவர் இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.

இதன்போது அரச தலைவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

எந்தவொரு நபருக்கும் தாம் விரும்புவது போன்று ஆர்ப்பாட்டம் செய்வதற்கு இடமளிக்க வேண்டும். அதேநேரம் ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் தொடர்பில் மக்கள் தீர்மானம் எடுத்துக் கொள்வார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் மற்றும் போராட்டம் நடத்துபவர்களுக்கு எதிராக பொலிசார் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் சரத் வீரசேகர அமைச்சரவையில் கேட்டுக்கொண்ட போதே அரச தலைவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்கள் மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தொடர்ந்தும் அவர்கள் வேலைநிறுத்தம் மற்றும் போராட்டத்தை முன்னெடுப்பார்கள் எனவும் அமைச்சர் சரத் வீரசேகர அமைச்சரவைக் கூட்டத்தில் மேலும் தெரிவித்துள்ளமை கறிப்பிடத்தக்கது.

000

Related posts: