அனைத்து பாடசாலைகளுக்கும் ஜூலை 20 வரை விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2022/07/images-1-7.jpg)
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 18 ஆம் திகதிமுதல் 20ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை காணொளி தொழில்நுட்பம் வாயிலாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது பாடசாலைகளுக்கு 18 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த விடுமுறை காலம் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மாணவி வித்தியா கொலை வழக்கு : மரபனுப்பரிசோதணை அறிக்கையால் சர்ச்சை!
மாகாண ஆளுநர்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இடையில் ஒருங்கிணைக்கும் அதிகாரி ஒருவரை நியமிக்கு...
நாட்டில் நிலவும் கடும் காற்றுடன் கூடிய மழையுடனான காலநிலை - அனர்த்த நிலைமைகள் தொடர்பில் மேற்கொள்ள வேண...
|
|