அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் நியமனம் – ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக 25 மாவட்டங்களின் செயலாளர்களும் செயற்படுவர் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2022/05/download-20.jpg)
அத்தியாவசிய சேவைகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல் தொடர்பான அனைத்து செயற்பாடுகளையும் செயற்படுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் இரண்டு மேலதிக ஆணையாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரப் பிரதானியான கே.டி.எஸ். ருவன் சந்திர அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாகவும் மேலதிக ஆணையாளர்களாக விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர் ரோஹன புஸ்பகுமார மற்றும் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அதன் ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக 25 மாவட்டங்களின் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வடக்கில் எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்ள தயார் -யாழ். கட்டளைத் தளபதி
முதலமைச்சரை சுற்றிவளைத்த பட்டதாரிகள்! வடமாகாண சபை முற்றுகை!
அரசு அலுவலக வளாகத்தில் தீ - ஒருவர் பலி!
|
|