முதலமைச்சரை சுற்றிவளைத்த பட்டதாரிகள்! வடமாகாண சபை முற்றுகை!

Tuesday, May 9th, 2017

வடமாகாண வேலையில்லா பட்டதாரிகள் வடமாகாண சபைக்கு முன்னால் இன்று மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள்.

தமது நியமனங்களை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி கடந்த 72 நாட்களாக  வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமது தீர்வை வழங்குமாறு இன்றைய தினம் வடக்கு மாகாண சபையை முற்றுகையிட்டுள்ளனர்.

வடக்கு மாகாண சபை வாயிலை மூடியும், வடக்கு முதல்வர் மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஆகியோரின் காரியாலயங்களை முற்றுகையிட்டும் இப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

பட்டதாரிகளுடன் முதல்வர் விக்னேஸ்வரன் கலந்துரையாடியபோதும், தமக்கு உறுதிமொழி வழங்காவிட்டால் சபைக்குள் அனுமதிக்க மாட்டோம் என பட்டதாரிகள் கூறியுள்ள நிலையில் முதல்வர் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளார்.

முதல்வரைத் தொடர்ந்து சில அமைச்சர்களும் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: