அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க ஏற்பாடு – கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/08/images-13.jpg)
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 18 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
18 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டம் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளது எனவும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதன்பிரகாரம் அடுத்த இரண்டு வாரங்களில் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும்தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அதிவேக நெடுஞ்சாலையில் 97 ஆயிரம் வாகனங்கள் பயணிப்பு-பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க!
இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் கேள்விக்குறி - அர்ஜுன
உழைக்கும் மக்கள் வெற்றிபெறட்டும் – மே தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி கோட்டாபய !
|
|