அடுத்த ஆண்டு பெப்ரவரி வரை பிற்போடப்பட்டது க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை – கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் அறிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/07/download-8-8.jpg)
2021 ஆம் ஆண்டிற்காக கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையை ஒத்திவைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதிமுதல் மார்ச் மாதம் 3 ஆம் திகதிவரையில் குறித்த பரீட்சையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று (26) காலை கொழும்பு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
மேலும் உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 5 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 வரை நடைபெறும் என ஏற்கனவே கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அறிவித்திருந்தமை குறிப்பிடததக்கது.
அத்துடன் கொரோனா நிலமையை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|