80 ஆயிரம் புதிய குழந்தைகள் பதிவு செய்யப்படவில்லை – குடும்ப சுகாதார பணியகம் தெரிவிப்பு!

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டு இருந்தமையினால் புதிதாகப் பிறந்த 80,000 குழந்தைகள் இதுவரை பதிவு செய்யப்படவில்லை என்று குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி மார்ச் , மே மாதங்களுக்கு இடையில் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ்களை வழங்குவதற்கு பதிவாளர் ஜெனரல் திணைக்களத்தினால் முடியாமல் போனதாக கூறப்படுகின்றது.
இதன்காரணமாக பதிவு செய்யப்படாத குழந்தைகளை பதிவு செய்வதற்கு கைபேசி மூலமான பதிவு சேவை ஒன்று தொடங்கப்பட உள்ளது என்று பதிவாளர் ஜெனரல விதானகே தெரிவித்துள்ளார்.
இதன்படி பெற்றோர் தமது பிறப்புச் சான்றிதழ், திருமண சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி கைபேசி சேவை மூலமாக தமது குழந்தைகளின் பிறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு கிராம சேவகரின் சான்று தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மலேரியா தொற்றியிருந்தால் உடன் சிகிச்சையளிக்கவும்!
குடாநாட்டில் நடைபெறும் வெசாக் கொண்டாட்டங்களின் தொகுப்பு....................
தரம் 5 மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பதில் எந்த மாற்றமும் இல்லை - கல்வி அமைச்சு அறிவிப்பு!
|
|