75 வீத பவளப்பாறை வளம் இலங்கையில் அழிவு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/01/imageproxy-300x197.jpg)
இலங்கையின் பவளப்பாறை வளத்தில் 75 வீதம் அழிவடைந்துள்ளதாக சமுத்திர சூழல் சார் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேற்படி பவளப்பாறை வளம் அழிவடைந்து செல்வதற்கு மனித செயற்பாடுகளே காரணமாக அமைந்துள்ளதென அதிகார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி டர்னி பிரதீப்குமாரதெரிவித்துள்ளார்.
இதனால் சமுத்திர சூழல் கட்டமைப்பின் சமநிலையில் தாக்கம் ஏற்பட்டு கடலரிப்பு அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் செயற்கை முறையில் பவளப்பாறைகளை உருவாக்குவதற்கான திட்டமொன்று மட்டக்களப்பு பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்
Related posts:
தென்மராட்சியில் மோதல்: மாணவர்கள் மூவர் காயம்!
போத்தலில் அடைக்கப்பட்ட பனங்கழி அமோக விற்பனை - பனை அபிவிருத்திச் சபை!
இந்தியா நிதி உதவி – புனரமைப்பு பணிக்காக அனுராதபுரம் - வவுனியா புகையிரத சேவை 5 மாதங்களுக்கு இடைநிறுத்...
|
|