வெளியேறினார் சந்திமல்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/07/image_1499828743-7019406229-400x255.jpg)
உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் தினேஸ் சந்திமால் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார்.
நேற்றைய தினம் அவர் இவ்வாறு வெளியேறியுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபையின் மருத்துவப் பரிந்துரை பிரிவின் உறுப்பினரான பேராசிரியர் அர்ஜுன த சில்வா தெரிவித்துள்ளார்.
காய்ச்சல் காரணமாக சந்திமால் தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது அவருக்கு நிமோனியா ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
அதன்படி , சிகிச்சை பெற்றுவந்த சந்திமாலுக்கு , நோய் நிலைமை குறைவடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் ,சந்திமாலை பரிசோதித்த மருத்துவர் அர்ஜுன த சில்வாவின் பரிந்துரையின் படி அவர் வீடு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் , சுமார் ஒரு வாரக்காலம் ஓய்வு பெற வேண்டும் என பேராசிரியர் மருத்துவர் அர்ஜுன த சில்வா எமது செய்திச் சேவைக்கு தெரிவித்திருந்தார்.அதன்படி , இலங்கை – இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சந்திமால் விளையாடுவார் என தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் காலி சர்வதேச விளையாட்டரங்களில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|