வெங்காய செய்கையில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபாடு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/06/images-1-13.jpg)
யாழ் குடாநாட்டில் வெங்காய் செய்கையில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டு வருகின்ற நிலையில் நோய்த்தாக்கத்துக்குட்பட்ட வெங்காய செய்கைக்கு கிருமிநாசினி விசிறி வருகின்றனர்.
இவ் வருடம் சுமார் இரண்டாயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் வெங்காய செய்கையை மேற்கொள்ள விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கமைய ஏற்கனவே வெங்காய செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் விளைச்சலை பெற்றுள்ளபோதும் சில இடங்களில் நோய்த்தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே நோய்த்தாக்கத்திலிருந்து செய்கையை பாதுகாக்கும் முகமாக கிருமி நாசினிகள் விசிறப்பட்டு வருகின்றன.மேலும் அநேகமான விவசாயிகள் விதை வெங்காயங்களை நடுகை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related posts:
போலியோ அச்சுறுத்தல் நாட்டில் இல்லை - பிரதமர் ரணில்
கத்திக் குத்து தாக்குதல் – இலங்டனில் இலங்கை இளைஞன் கொலை!
பெண்களை வீட்டுப் பணியாளர்களாக அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ம...
|
|