வெங்காய செய்கையில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபாடு!

யாழ் குடாநாட்டில் வெங்காய் செய்கையில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டு வருகின்ற நிலையில் நோய்த்தாக்கத்துக்குட்பட்ட வெங்காய செய்கைக்கு கிருமிநாசினி விசிறி வருகின்றனர்.
இவ் வருடம் சுமார் இரண்டாயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் வெங்காய செய்கையை மேற்கொள்ள விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கமைய ஏற்கனவே வெங்காய செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் விளைச்சலை பெற்றுள்ளபோதும் சில இடங்களில் நோய்த்தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே நோய்த்தாக்கத்திலிருந்து செய்கையை பாதுகாக்கும் முகமாக கிருமி நாசினிகள் விசிறப்பட்டு வருகின்றன.மேலும் அநேகமான விவசாயிகள் விதை வெங்காயங்களை நடுகை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related posts:
யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புனரமைக்கப்படாத நிலையிலுள்ள வீதிகளைப் புனரமைக்க நடவடி...
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சிங்கப்பூர் பயணத்தடை விதிப்பு!
பல்கலை அனுமதி விண்ணப்பத்திற்கு பாடசாலை அதிபரின் சான்றிதழ்கள் தேவையில்லை - பல்கலைக்கழக மானியங்கள் ஆணை...
|
|