விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பயனின்றிச் சாவு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/01/download-1-14.jpg)
மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த பெண்மணி 11 தினங்களின் பின்னர் உயிரிழந்துள்ளார்.
அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த திருமதி குணராசா அஜநதி (வயது39) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
ஆவரங்கால் – வல்லை முதன்மை வீதியில் பெரிய மதவடி பகுதியில் கடந்த 6 ஆம் திகதி விபத்துக்குள்ளானார்.
பெண் மேற்படி தனது இல்லத்துக்குச் செல்வதற்கு வீதியைக் கடப்பதற்கு முற்பட்ட வேளையில் வடமராட்சி நோக்கிவந்த இளைஞனின் உந்துருளி மோதியதில் படுகாயமடைந்தார்.
இந்த விபத்தில் இரண்டு பெண்களும் இரண்டு இளைஞர்களுமாக நான்குபேர் படுகாயமடைந்தனர்.
Related posts:
யாழ்ப்பாணத்தில் ஆறு பிரதான சந்திகளில் வீதிச் சமிக்ஞைகள் பொருத்த நடவடிக்கை!
பல்கலையில் ஆர்ப்பாட்டம்!
இரணைத்தீவில் கவனயீர்ப்பு பேரணி!
|
|