யாழ்ப்பாணத்தில் ஆறு பிரதான சந்திகளில் வீதிச் சமிக்ஞைகள் பொருத்த நடவடிக்கை!

Sunday, June 5th, 2016
யாழ்.மாவட்­டத்­தி­லுள்ள ஆறு பிர­தான சந்­தி­களில் வீதிச் சமிக்ஞை விளக்­குகள் பொருத்தப்­ப­ட­வுள்­ளன. இந்த சமிக்ஞை விளக்­கு­களை நான்­கு­மாத காலப்பகுதிகளில் இணைப்புச் செய்­வ­தற்­கான ஏற்­பா­டு­களை வீதி அபி­வி­ருத்தி அதிகா­ர­சபை மேற்­கொண்­டுள்­ளது.
யாழ்.மாவட்­டத்தில் பிர­தான வீதி­களில் போக்­கு­வ­ரத்து நெருக்­க­டியும் வாகன விபத்துக்களும் அண்மைக் கால­மாக அதி­க­ரித்து வரு­கின்­றன. இந்த நிலையை கருத்தில்கொண்டு வீதிச்­ச­மிக்ஞை விளக்­கு­களைப் பொருத்­து­மாறு கோரிக்கை விடப்பட்டு வந்­த­ தோடு பிர­தேச செய­லக ரீதி­யி­லான ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்டங்களிலும் இந்தக் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்டு வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்­றது.
கோப்பாய் சந்தி, வேம்­படிச் சந்தி, திரு­நெல்­வேலிச் சந்தி, ஆரி­ய­குளம் சந்தி, நெல்லியடிச்சந்தி, சுன்­னாகம் சந்தி ஆகிய ஆறு சந்­தி­களில் வீதிச் ­ச­மிக்ஞை விளக்குகள் பொருத்­தப்­ப­ட­வுள்­ளன.
யாழ்.நகரில் கடந்த ஒரு வரு­டத்­துக்கு மேலாக சத்­தி­ரத்து சந்­தியில் வீதிச்­ச­மிக்ஞை விளக்கு செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றது. இது பரீட்­சார்த்­த­மாக யாழ். மாவட்டத்தில் முதன்­மு­த­லாக பொருத்­தப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.
வீதி விளக்­குகள் பொருத்­து­வ­தற்கு உரிய அனு­மதி வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபைக்கு கிடைக்கப் பெற்­றி­ருப்­ப­தா­கவும் எதிர்­வரும் செப்­டெம்பர் மாத இறுதிக்கு முன்னர் குறித்த ஆறு சந்திகளிலும் வீதி விளக்கு சமிக்ஞை இணைப்புச் செய்து முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: