மத்தியவங்கிக்கு புதிய துணை ஆளுநர் நியமனம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/08/51289773b230c522f70a6d334871ff98_XL.jpg)
இம்மாதம் 19ம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் அனுமதியுடன் இலங்கை மத்திய வங்கியின் புதிய துணை ஆளுநராக சி.ஜே.பி. சிறிவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு , நிதியியல் முறைமை உறுதிப்பாடு , இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படும் முகவர் தொழிற்பாடு உள்ளிட்ட துறைகளில் 31 வருடங்களுக்கு மேலான அனுபவத்தினை திரு.சி.ஜே.பி. சிறிவர்த்தன கொண்டுள்ளார்.
இவர் முன்னர் பொதுப்படுகடன் , தகவல் தொழில்நுட்பம், சட்டம், மற்றும் இணங்குவிப்பு ,பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்பு , மனித வளங்கள், கொள்கை மீளாய்வு மற்றும் கண்காணிப்பு , கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு மற்றும் இடர்நேர்வு முகாமைத்துவம் போன்ற திணைக்களங்களுக்கு பொறுப்பாக இருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நதிகளை தூய்மையாக்கி பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பம்!
தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பது தொடர்பில் நாளை தீர்மானம் - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவ...
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் – நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளி...
|
|