பேருந்து விபத்து: 18 பேர் வைத்தியசாலையில்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/09/9092206_G.jpg)
திருகோணமலையிலிருந்து பருத்தித்துறைக்கு பயணித்த தனியார் பேருந்து ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் 18 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது காயமடைந்த 6 பெண்கள் மற்றும் 12 ஆண்கள், ஹொரவப்பத்தான மற்றும் அனுராதபுர வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதியினால் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஹொரவப்பத்தான பொலிஸ் மேலதிக விசாரணைகளில் மேற்கொண்டுள்ளனர்.
Related posts:
வரட்சியின் தாக்கத்தினால் வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் அதிகளவில் பாதிப்பு!
தவறான பக்கங்களில் வாகனம் செலுத்திய ஐவருக்கு 13 ஆயிரத்து 500 ரூபா தண்டம்!
நேற்றும் இதுவரையில் 2,906 பேருக்கு கொரோனா!
|
|