பெண்களுக்கு எதிரான வன்முறை இவ்வாண்டில் 1700 முறைப்பாடுகள்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/11/Tamil_News_335487008095-copy.jpg)
பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் இந்த வருடத்தில் மாத்திரம் 1700இற்கும் அதிகமான முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக பெண்களுக்கான தேசிய குழுவின் நிறைவேற்று பணிப்பாளர் அநுலா இந்திராணி தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கும் முறைப்பாடுகள் கிடைப்பதாக பெண்களுக்கான தேசிய குழுவின் நிறைவேற்று பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
வன்முறையைக் கட்டுப்படுத்த பல பிரிவுகளுடாகவும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இதனடிப்படையில் பிரதேச செயலக மட்டங்களிலும் வேலைத்தளங்களை மையமாகக் கொண்டு தோட்டப்புறப் பிரதேசங்களிலும் தெளிவூட்டல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அநுலா இந்திராணி மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் குதிக்கும் லொத்தர் சீட்டு விநியோகஸ்தர்கள்!
ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட 20 பேர் கைது!
ஏப்ரல் 21 தாக்குதல் : ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் நிறைவு – ஜனவரி 31 இல் ஜனாதிபதியிடம் கையளிப்பு!
|
|