பாதுகாப்பு கடமையிலுள்ள படையினரை பாதுகாக்க உடனடி நடவடிக்கை – வெலிசர கடற்படை முகாம் முற்றாக முடக்கம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/04/Corona-Virus-14.jpg)
கொரோனா தொற்றிருந்தும் பாதுகாப்பு கடமையிலுள்ள படையினரை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், சகல கடற்படை வீரர்களுக்கும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு விடுமுறை வழங்கப்படாத நிலையில் அனுமதி வழங்கப்பட்ட கடமைகளுக்கு மட்டுமே முகாம்களை விட்டு வெளியேற முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், வெலிசர கடற்படை முகாம் தற்போது முடக்கப்பட்டுள்ள நிலையில் அதற்குள் இருந்து வெளியேறவும் உட்பிரவேசிப்பதற்கும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
1.95 பில்லியன் நிதியில் பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு அமைச்சரவை !
எதிர்வரும் வாரம் கொழும்பில் தாக்குதல் நடத்த திட்டம் ? - சரத் பொன்சேகா எச்சரிக்கை!
இந்த வருடத்தில் 4 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை - சுற்றுலா அபிவிருத்தி ...
|
|