நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் அனுமதியின்றி நடைபாதை வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் அனுமதியின்றி நடைபாதை வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனுமதியின்றி வியாபாரத்தில் ஈடுபடும் நடைபாதை வியாபாரிகள் பிரதேச சபைக்கு வரி செலுத்துவதில்லை.
எனவே, அனுமதியின்றி வியாபாரத்தில் ஈடுபடுவோர் இனங்காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படுவதுடன், சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என சபையின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
முயற்சியை கைவிட்டார் சுசந்திகா!
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பெண்களுக்கு அநீதி – சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே!
எதிரணி மற்றும் மக்களது கேள்விகளுக்கு பதிலளிக்க நாடாளுமன்றில் அமைச்சர்களது பிரசன்னம் கட்டாயம் - ஜனாதி...
|
|