யாழ்ப்பாண மாவட்ட சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு 35 மில்லியன் ஒதுக்கீடு!
Sunday, June 17th, 2018
சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்துக்குட்பட்ட இரண்டு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக 35.42 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அமுலாக்கத்தின் கீழ் வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவு ஜே-007 கிராம அலுவலர் பிரிவில் மண்டைதீவு சுற்றுச்சூழல் சுற்றுலா மையத்தில் கம்பியிலான கல் அணை 29.97 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளது.
அத்துடன் மாவட்ட செயலக அமுலாக்கத்தில் உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே-200 கந்தரோடை கிராம அலுவலர் பிரிவில் கந்தரோடைக் குளத்தை அண்டிய பகுதியைச் சுற்றுலா மையமாக்குவதற்கு 5.45 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
Related posts:
தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கைகளை பணி நிறைவு - தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை!
அரிசியை பதுக்கும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!
இலங்கை -சீனா இடையே நேரடி விமான சேவை!
|
|
|


