நல்லூர் ஆலயச் சுற்றாடலில் வீடுகளில் நாய்களை வளர்ப்போர் கட்டிப் பராமரிக்குமாறு அறிவுரை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/08/download-27.jpg)
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயப் பெருந்திருவிழா இன்று(08) காலை இடம்பெறவுள்ள நிலையில் நல்லூர் ஆலயச் சுற்றாடலில் வீடுகளில் நாய்களை வளர்ப்போர் அவற்றைக் கட்டிப் பராமரிக்குமாறு யாழ். மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாய்களின் உரிமையாளர்கள் நாய்களுக்குத் தடுப்பு மருந்தேற்றியிருப்பதுடன், யாழ். மாநகர சபையில் பதிவினை மேற்கொண்டு அனுமதிப் பத்திரம் வைத்திருக்கவும் வேண்டும்.
மேலும், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் வீடுகளிற்குத் திடீர்ப் பரிசோதனை மேற்கொள்ளும் போது அனுமதிப் பத்திரம் வைத்திருக்காத நாய்களின் உரிமையாளர்கள் மீது நாய்கள் பதிவு செய்யும் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
150 வீடமைப்பு மாதிரி கிராமங்கள் வடமாகாணத்தில் ஸ்தாபிப்பு!
யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு அருகில் இருந்து பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடிய வெடிபொருள்கள் மீட்பு – த...
அரச நிறுவனங்களின் கட்டமைப்பை வலுப்படுத்தி மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் வகையில் வழிகாட்டுதல்களை...
|
|