தென்மராட்சியில் வறிய குடும்பங்களுக்கு சிமெந்துப் பொதிகள் வழங்கல்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/10/simanthuj.jpg)
தென்மாராட்சி பிரதேசத்தில் வாழும் 90 வறிய குடும்பங்களுக்கு மானிய அடிப்படையில் தலா 10 சிமெந்துப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த பிரதேசத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் உட்பட வீட்டின் கட்டட வேலைகளை மேற்கொண்டு வீட்டின் சுவர்கள் பூசப்படாத நிலையில் வீடுகளில் வசிக்கும் வறிய குடும்பங்களுக்கு சுவர்களுக்கு பூச்சு வேலையைப் பூர்த்தி செய்வதற்காக அவை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதேச வீடமைப்பு அலுவலரின் பரிந்துரையின் பிரகாரம் பிரதேசத்தின் 60 கிராம அலுவலர் பிரிவுகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 90 பயனாளிகளுக்கு வீடமைப்பு அதிகார சபையால் சிமெந்துப் பொதிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொழும்பு துறைமுக நகர நிர்மாணப் பணிகளில் புதிய ஒப்பந்தம்!
பாடசாலை மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட இணையவழி கற்கை தோல்வி - இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவிப...
ஐ.நா சபை பொதுச் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ள அவசர காலநிலை நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதில் இ...
|
|