கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்பம் வெளிநாடாக இருக்கலாம் – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் ஆரம்பம் வெளிநாடாக இருக்கலாம் என இராணுவ தளபதி லெப்டின்ன ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் கந்தகாடு கொரோனா கொத்தணி தொடர்பில் இறுதியாக ஓகஸ்ட் மாதம் இனங்காணப்பட்டதாகவும் அதனடிப்படையில் இந்நாட்டில் சமூகத்திற்கு இடையில் கொரோனா இருக்கவில்லை எனவும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.
மேலும் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு சிலர் வருகை தந்ததாகவும் கடற்படை நடைவடிக்கைகளுக்காக வருகை தந்த 6 பேரும் நேற்றும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
திருட்டு குற்றச்சாட்டில் கைதான இருவர் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 32 வீதமாக குறைவடைந்துள்ளன - நீர்ப்பாசன திணைக்களம் அறிவிப்பு!
அமெரிக்க - இலங்கை நட்புறவின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாட இலங்கை வருகின்றார் அமெரிக்க இராஜாங்க திண...
|
|