குப்பிளான் வடக்கில் மிதிவெடி மீட்பு!

குப்பிளான் வடக்கு பகுதியிலுள்ள வீட்டுக்காணியிலிருந்து வெடிக்க கூடிய நிலையில் காணப்பட்ட மிதிவெடி, இன்று(21) மீட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணி உரிமையாளர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், அவரது உறவினர் ஒருவர் அந்தக் காணியினை பராமரித்து வருகின்றார். அவர் காணியினை துப்பரவு செய்த போது நிலத்தில் புதையுண்ட நிலையில் மிதிவெடி இருப்பதை கண்டுள்ளார். அதனையடுத்து, இது தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு, விசேட அதிரடிப்படையினருடன் சென்ற பொலிஸார், மிதிவெடியை மீட்டு செயலிழக்கச்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Related posts:
சரத் பொன்சேகாவுக்கு எதிராக தாக்கல் செய்த மனு விசாரணை ஒத்திவைப்பு!
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்!
நுங்குகள் பறிப்பதை தடுக்க முடியவில்லை - பனை அபிவிருத்திச் சபை கூறுகிறது!
|
|