குடாநாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் இன்றும் கடும் மழை பெய்யும்!

யாழ். குடாநாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் இன்றும் கடும் மழை பெய்துள்ளது. நேற்றும் காலை 08.15 மணி தொடக்கம் ஒரு மணிவரை கடும் மழை பெய்துள்ளது. இதனால் யாழ்.குடாநாட்டின் பல்வேறு இடங்களிலும், வீதிகளிலும் வெள்ள நீர் தேங்கி நின்றதை அவதானிக்க முடிந்தது.
வலிகாமம் பகுதியில் நேற்று இரவு மீண்டும் கடும் காற்றுடன் மழை பெய்ய ஆரம்பிதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் கடந்த இரு தினங்களில் 138.3 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், இக்காலநிலை இன்னும் மூன்று தினங்களுக்கு தொடரும் எனவும் திருநெல்வேலி வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.பிரதீபன், திங்கட்கிழமை (21) தெரிவித்தார்.
Related posts:
தனிநபர் கணினி தொழிற்துறையில் பாரிய வீழ்ச்சி!
மாத்திரையைப் போதையாக பயன்படுத்திய விவகாரம் - பிராந்திய மருந்தகங்களிலேயே மாணவர்களுக்கு விற்கப்பட்டன!
வெளிநாட்டவர்களின் வருகை யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு!
|
|