கடல் உணவுத் தொழில்நுட்ப டிப்ளோமா கற்கைநெறிக்கு விண்ணப்பம் கோரல்!
Friday, November 4th, 2022
இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் யாழ். பிராந்திய நிலையத்தால் நடத்தப்படவுள்ள கடல் உணவுத் தொழில்நுட்ப டிப்ளோமா கற்கை நெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இக்கற்கை நெறி தேசிய தொழில் தகைமை மட்டம் 5க்குரியது. 18 மாதங்களைக் கொண்ட இக்கற்கை நெறி முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள்ளதாகவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.
இக்கற்கை நெறியை கற்க விரும்புவோர் எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதிக்கு முன் விண்ணப்பிக்குமாறும் மேலதிக விபரங்களை முதலாம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்திலுள்ள பிராந்திய அலுவலகத்துடன் நேரடியாகவோ அல்லது 071 8349073 மற்றும் 0762939888 என்ற தொலைபேசி இலக்கங்களுடனோ தொடர்பு கொண்டு பெற முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு 210 மில்லியன் யூரோ நிதி உதவி!
வெற்றிடங்கள் நிரப்பப்படாத நிலையில் இயங்கும் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்!
வீடமைப்பை ஆரம்பிக்கும் போதே குறித்த கட்டத்திற்கான தவணைக் கொடுப்பனவை செலுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகா...
|
|
|


